காலாங் - பாயா லேபார் விரைவுச்சாலையில் சாலைத் தடுப்பில் மோதிய மோட்டார்சைக்கிள்
காலாங்-பாயா லேபார் விரைவுச்சாலையில் சாலைத் தடுப்புடன் மோதிய 20 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிங்கப்பூர்: காலாங்-பாயா லேபார் விரைவுச்சாலையில் சாலைத் தடுப்புடன் மோதிய 20 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மரீனா விரைவுச்சாலைக்குச் செல்லும் வழியில் நடந்த விபத்து பற்றி இன்று (ஜனவரி12) காலை சுமார் 8.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல் துறை தெரிவித்தது.
மலேசியர் என்று நம்பப்படும் ஆடவர் சுயநினைவோடு இருந்த நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் வேறு எந்த வாகனமும் பாதிக்கப்படவில்லை. மோட்டார்சைக்கிள் ஓட்டுநருக்கு இடது கால் முறிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மலேசியப் பதிவு எண் கொண்ட மோட்டார்சைக்கிள் தம்பனீஸ் ரோட்டுக்கு இட்டுச் செல்லும் இடத்துக்கு அருகே கவிழ்ந்து கிடப்பதை Facebookஇல் பரவி வரும் படங்கள் காட்டுகின்றன.
விசாரணை தொடர்கிறது.