Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விரைவு அதிரடிப் படையினரின் மோட்டார்சைக்கிள்கள் மோதல்- 2 காவல்துறை அதிகாரிகள் காயம்

சம்பவம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. 

வாசிப்புநேரம் -
விரைவு அதிரடிப் படையினரின் மோட்டார்சைக்கிள்கள் மோதல்- 2 காவல்துறை அதிகாரிகள் காயம்

(படம்:Screengrabs: YouTube / trafficspore)

சிங்கப்பூரில் விரைவு அதிரடிப் படையினரின் மோட்டார்சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு இலேசான காயம் ஏற்பட்டது.

அந்தச் சம்பவம், சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் சனிக்கிழமை(மார்ச் 10) காலை 11 மணியளவில் நடந்தது.

சம்பவம் குறித்து பொதுமக்கள் தெரிவித்த அக்கறைகளுக்குக் காவல்துறை நன்றி தெரிவித்துக் கொண்டது. 

காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு வெளிநோயாளி சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை அதன் அறிக்கையில் தெரிவித்தது. 

சம்பவம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. 


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்