தேசிய சேவைக்கான உல்லாச, பொழுதுபோக்கு மன்றம் திறக்கப்பட்ட நாள்
தேசிய சேவைக்கான உல்லாச, பொழுதுபோக்கு மன்றம் திறக்கப்பட்ட நாள்
13 மார்ச் 1994
சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தேசிய சேவையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில் 1994ஆம் ஆண்டு இன்றைய தினம் சாங்கியில் பொழுதுபோக்கு மன்றம் ஒன்று திறக்கப்பட்டது.
தேசிய சேவைக்கான உல்லாச, பொழுதுபோக்கு மன்றமும் கோல்ஃப் (golf) விளையாடுவதற்கான இடமும் தேசிய சேவையாளர்களுக்காகவே கட்டப்பட்டது.
இராணுவம், கடற்படை, ஆகாயப் படை, குடிமைத் தற்காப்பு, காவல்துறையைச் சேர்ந்த தேசிய சேவையாளர்கள், மன்றத்தின் சிறப்புச் சலுகைகளை அனுபவிக்கலாம்.