Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நியூசிலந்து ஆகாயப் படைத் தளத்தில் சிங்கப்பூரின் F-15 ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுடலாம்

சிங்கப்பூரின் F-15 ரக விமானங்கள், ஒஹாக்கியா ஆகாயப் படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான பரிந்துரையை நியூசிலந்து தொடர்ந்து மதிப்பிடவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் F-15 ரக விமானங்கள், ஒஹாக்கியா ஆகாயப் படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான பரிந்துரையை நியூசிலந்து தொடர்ந்து மதிப்பிடவிருக்கிறது.

சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சு இன்று அதனைத் தெரிவித்தது. ஆக்லந்தில் நடைபெறும் இரு நாட்டுத் தற்காப்பு அமைச்சர்களின் வருடாந்தரச் சந்திப்பையடுத்து அமைச்சின் அறிக்கை வெளியானது.

2ஆவது முறையாக அத்தகைய சந்திப்பு இடம்பெறுகிறது.

சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும், நியூசிலந்துத் தற்காப்பு அமைச்சர் ரோன் மார்க்கும், வட்டாரப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்துக் கலந்துரையாடியதாய்த் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்