கேலாங்கில் கலவரம் செய்த 13 சந்தேக நபர்கள் கைது
கேலாங் வட்டாரத்தில் சண்டையில் ஈடுபட்ட ஆடவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
கேலாங் வட்டாரத்தில் சண்டையில் ஈடுபட்ட ஆடவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் 517 கேலாங் ரோட்டில் அந்தச் சண்டை நடத்தது.
கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 18 லிருந்து 23 வயதுக்கு உட்பட்ட ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.
கலவரம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.