F1 இரவுநேரக் கார்ப்பந்தயம் சிங்கப்பூரில் தொடர்வதற்கான பேச்சு நீடிக்கிறது
சிங்கப்பூரில் அந்தப் பந்தயத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற முடிவை எட்டுவது இலக்கு.
சிங்கப்பூரில் F1 இரவுநேரக் கார்ப்பந்தயத்தை இந்த ஆண்டுக்குப் பிறகு நீட்டிப்பது குறித்த கலந்துரையாடல் நடந்துகொண்டிருக்கிறது.
F1 இரவுநேரக் கார்ப்பந்தயத்தின் புதிய தலைவர் (Chase Carey) சேஸ் கேரி அதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் அந்தப் பந்தயத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற முடிவை எட்டுவது இலக்கு.
சாதகமான முறையில் பேச்சு நடக்கிறது என்றும் திரு கேரி கூறினார்.
எனினும் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.