சண்டையில் ஈடுபட்ட செயிண்ட் ஹில்டா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
மாணவர்கள் சண்டைபோடும்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
செயின்ட் ஹில்டா உயர்நிலைப் பள்ளி வகுப்பில் சண்டையிட்ட 3 மாணவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சண்டைபோடும்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் போக்கிரிகள் என்று பொதுமக்கள் குறைகூறினர்.
சண்டையிட்ட மாணவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் துணை முதல்வர் தெரிவித்தார்.
மாணவர்களின் பெற்றோருடன் பள்ளி அணுக்கமான தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.