Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த ஓரிரு நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை

காற்றுடன் கூடிய மழையையும், இடியையும் அடுத்த ஓரிரு நாட்களுக்கு எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
அடுத்த ஓரிரு நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை

(படம்:AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரமாகத் தட்பநிலை குறைவாக உள்ளது.

தென்சீனக் கடல் பகுதியில் பெய்யும் பருவமழை அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 

இன்று தட்பநிலை சற்றே அதிகரித்துத் தற்போது, சராசரியாக 27 டிகிரி செல்சியஸாக உள்ளது. 

இருப்பினும், இரவு நேரம் அது மேலும் குறையும் என்பது முன்னுரைப்பு.

காற்றுடன் கூடிய மழையையும், இடியையும் அடுத்த ஓரிரு நாட்களுக்கு எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரம் தட்பநிலை எப்படி இருந்தது என்பதைப் படத்தில் காணலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்