மரினா பே சாண்ட்ஸ்: சூதாட்டக் காய்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் மூவர் கைது
மரினா பே சாண்ட்ஸில் இருந்தவர்களிடம் சூதாட்டக் காய்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் மூவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.
மரினா பே சாண்ட்ஸில் இருந்தவர்களிடம் சூதாட்டக் காய்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் மூவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.
சந்தேக நபர்கள் மூவரும் சூதாட்டக் கூடத்தின் மேசைகளிலும், அங்கு வந்திருந்தோரிடமும் சூதாட்டக் காய்களைத் திருடியதாக காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
திருடப்பட்ட சூதாட்டக் காய்களின் மதிப்பு 23 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகம்.
சந்தேக நபர்களிடமிருந்த சூதாட்டக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.