காணாமற்போன 11-வயது வகுப்புத் தோழர்கள்
ஒரே வகுப்பில் பயில்வதாக நம்பப்படும் 11-வயது மாணவர்கள் இருவர் நேற்றுப் பிற்பகலிலிருந்து ( ஜனவரி 18) காணாமற்போனதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூர்: ஒரே வகுப்பில் பயில்வதாக நம்பப்படும் 11-வயது மாணவர்கள் இருவர் நேற்றுப் பிற்பகலிலிருந்து ( ஜனவரி 18) காணாமற்போனதாக நம்பப்படுகிறது.
ஜேவியர் தியோ ரென் ஜியே (Javier Teo Ren Jie), அக்ஸல் லிம் ஜுன் வேய் (Axel Lim Jun Wei) ஆகியோரே அந்த இரண்டு மாணவர்கள்.
காம்பஸ்வேல் லிங்க் புளோக் 273Dஇல் நேற்றுக் காலை மணி 7.10க்கு கடைசியாக ஜேவியர் காணப்பட்டார் என்று காவல் துறை தெரிவித்தது.
அக்ஸல் நேற்று இரவு மணி 7.30க்கு ரிவர்வேல் டிரைவ் கடைத்தொகுதியில் கடைசியாகக் காணப்பட்டார்.
Facebook பயனீட்டாளர் Leftone Shady-யின் பதிவில் ஜேவியர் இறுதியாக பார்க் கிரீன் கூட்டுரிமை வீடுகளில் தனது நண்பன் அக்ஸலுடன் காணப்பட்டார் என்று குறிப்பிட்டார்.
இருவரும் ரிவர்வேல் பிளாஸா கடையில் சீட்டு விளையாட்டிற்கு சென்றதால் அவர்கள் அங்கு இறுதியாகத் தென்பட்டிருக்கலாம் என்று அந்த மாது தெரிவித்தார்.
ஜேவியரைத் தங்களுடைய மகன் என்று கூறிக்கொள்ளும் Leftone Shady தாம் அவரது உண்மையான தாயார் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது Facebook பதிவு இதுவரை சுமார் 6,000 முறை பகிரப்பட்டுள்ளது.
சிறுவர்களைப் பற்றித் தகவல் அறிந்தவர்கள் 1800-255-0000 என்ற அவரசர எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.police.gov.sg/iwitness இணையவாசல் வாயிலாகத் தகவல் அளிக்கலாம்.
அனுப்பப்படும் தகவல் இரகசியமாக வைத்திருக்கப்படும் என்று காவல் துறை கூறியுள்ளது.