Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறுவனிடம் ஆபாசப் புகைப்படத்தைக் காட்டிய தோட்டக்காரருக்குச் சிறைத்தண்டனை

13 வயது சிறுவனிடம் ஆபாசப் புகைப்படத்தைக் காட்டியதற்காகச் சிங்கப்பூர்ப் பூமலையில் பணிபுரிந்த தோட்டக்காரருக்கு 2 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: 13 வயது சிறுவனிடம் ஆபாசப் புகைப்படத்தைக் காட்டியதற்காகச் சிங்கப்பூர்ப் பூமலையில் பணிபுரிந்த தோட்டக்காரருக்கு 2 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஜேக்கப் பல்லாஸ் சிறார் பூங்காவில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவனை அழைத்தார் 59 வயது சுவா ஆ குவான்.

சிறுவனிடம் ஒன்றைக் காட்ட விரும்புவதாக அவனிடம் கூறினார் சுவா.

சிறுவன் அவரை அணுகிய போது, தனது கைபேசியில் இருந்த ஆபாசப் புகைப்படம் ஒன்றை அவனிடம் காட்டினார் சுவா.

உதவிகேட்டு சிறுவன் அலறினான்.

அவ்வழியே சென்ற ஒருவர் அவனுக்கு உதவ விரைந்தார்.

சுவாவின் கைபேசியில் இருந்த 157 புகைப்படங்களில் அந்த ஆபாசப் புகைப்படமும் ஒன்று.

சுவாவுக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிப்பதற்கு அரசாங்கத் தரப்பு கோரிக்கை விடுத்தது.

ஆனால், சுவாவின் வழக்குரைஞர் அபராதம் விதிப்பது தான் பொருத்தமாக இருக்கும் எனக் கூறினர்.

21 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவனிடம் ஆபாசப் புகைப்படத்தைக் காட்டியதற்காக சுவாவிற்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டிருக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்