Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிளார்க் கீ அருகே சிங்கப்பூர் ஆற்றில் காணப்பட்ட இளையர்கள் இருவரின் சடலங்கள்

கிளார்க் கீ அருகே சிங்கப்பூர் ஆற்றில் இன்று காலை இளையர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வாசிப்புநேரம் -
கிளார்க் கீ அருகே சிங்கப்பூர் ஆற்றில் காணப்பட்ட இளையர்கள் இருவரின் சடலங்கள்

(படம்: Facebook/Rudy Ferragamo)

கிளார்க் கீ அருகே சிங்கப்பூர் ஆற்றில் இன்று காலை இளையர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அது குறித்துப் பின்னிரவு 2 மணிக்கு குடிமைத் தற்காப்பு படையினருக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆற்றில் யாரும் இல்லை என்று கூறினர்.

பிறகு குடிமைத் தற்காப்பு படையின் DART அணி முக்குளிப்பாளர்கள் ஆற்றில் தேடுதல் பணியைத் தொடங்கினர்.

உயர்ரக தொழில்நுட்ப வாகனத்தின் உதவியோடு நீருக்கடியில் அவர்கள் தேடலைத் தொடர்ந்தனர்.

முறையே 26, 28 வயது ஆடவர்களின் சடலங்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர்கள் மரணத்தில் சந்தேகத்திற்குரிய சதி ஏதும் இல்லை என்று காவல்துறை கூறியது.

விசாரணை தொடர்கிறது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்