Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு இடைநிலைப் பயணிகளாக வந்த மேலும் இருவரிடம் ஓமக்ரான் கிருமி

சிங்கப்பூருக்கு இடைநிலைப் பயணிகளாக வந்த மேலும் இருவரிடம் ஓமக்ரான் கிருமி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கு இடைநிலைப் பயணிகளாக வந்த மேலும் இருவரிடம் ஓமக்ரான் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பயணிகள் சிங்கப்பூர் வழி ஆஸ்திரேலியாவிற்கும் மலேசியாவிற்கும் சென்றனர் என்று சுகாதார அமைச்சு நேற்று (டிசம்பர் 3) தெரிவித்தது.

அவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணத்தை மேற்கொண்டவர்கள்.

ஆஸ்திரேலியப் பயணி நவம்பர் 27ஆம் தேதியும் மலேசியப் பயணி நவம்பர் 19ஆம் தேதியும் சாங்கி விமான நிலையத்திற்கு இடைநிலைப் பயணிகளாக வந்தனர்.

இருவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்; பயணங்களுக்கு முன்பு PCR பரிசோதனை செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையவில்லை என்றும் அவர்கள் சமூகத்துடன் கலக்கவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.

இவ்வாரத் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழி ஆஸ்திரேலியா சென்ற இரண்டு பயணிகளுக்கு ஓமக்ரான் கிருமி அடையாளம் காணப்பட்டது.

- CNA/gs(mi) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்