Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொகுசுக் கப்பலில் பயணம் செய்த இரு சிங்கப்பூரர்கள் மாண்டனர்

Voyager of the Seas எனும் சொகுசுக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு சிங்கப்பூரர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சொகுசுக் கப்பலில் பயணம் செய்த இரு சிங்கப்பூரர்கள் மாண்டனர்

கோப்புப் படம்: Royal Caribbean Cruise

Voyager of the Seas எனும் சொகுசுக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு சிங்கப்பூரர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்ட பயணிகளின் வயது 75, 61.

அவர்களின் மரணம், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இயற்கையான மரணம் என்று சொகுசுக் கப்பலை இயக்கும் Royal Caribbean Cruise நிறுவனம் கூறியது.

சம்பவம் குறித்து மாண்டவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாகவும் வேண்டிய உதவிகள் வழங்கப்படுவதாகவும் நிறுவனப் பேச்சாளர் கூறினார்.

நிறுவனம் மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டது.

சொகுசுக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து கடந்த திங்கட்கிழமை மாலை 4:30 மணியளவில் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை பினாங்கிற்குச் சென்றதாகவும், அடுத்த நாள் புக்கெட் செல்லவும், அதன் பின்னர் வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் வருவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாகவும் நிறுவனம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்