Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தோனியின் பெயரில் புதிய கிரிக்கெட் பயிற்சிப் பள்ளி -சிங்கப்பூரில்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மஹேந்திர சிங் தோனி, சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார். சிங்கப்பூரில் தனது பெயரிலான புதிய கிரிக்கெட் பயிற்சிப் பள்ளியை அவர் அறிமுகம் செய்துவைத்தார்.

வாசிப்புநேரம் -

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மஹேந்திர சிங் தோனி, சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார்.  சிங்கப்பூரில் தனது பெயரிலான புதிய கிரிக்கெட் பயிற்சிப் பள்ளியை அவர் அறிமுகம் செய்துவைத்தார்.

இளையர்களை விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடச் செய்வது பள்ளியின் குறிக்கோள்.

இந்தக் கால இளையர்கள் தொழில்நுட்பம் சார்ந்த பொழுதுபோக்குகளில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு கொண்டுள்ளனர், அவர்கள் தங்கள் உடல்நலத்தின் மீது போதுமான அக்கறை கொள்வதில்லை என்பது தோனியின் ஆதங்கம்.

கிரிக்கெட், காற்பந்து உள்ளிட்ட வெளிப்புற விளையாட்டுகள் மூலம் இளையர்களின் உடலுறுதி மேம்படுவதோடு கல்வியிலும் அவர்களால் சிறப்பாகச் செய்யமுடியுமென நம்புகிறார் தோனி.

6 வயதைத் தாண்டிய ஆண்கள், பெண்கள் இரு தரப்பினரும் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்துகொள்ளலாம். பயிற்சித் திட்டங்களை வடிவமைப்பது தோனி.அவற்றைச் செயல்படுத்துவது, சிங்கப்பூர்ப் பயிற்றுவிப்பாளர்கள்.
புதிய பள்ளி சிங்கப்பூரின் ஐந்தாவது முக்கியமான கிரிக்கெட் பயிற்சிப் பள்ளி.

ரெக்ஸ் மார்ட்டென்ஸ், நைட் ரைடர்ஸ், சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம், Yorker ஆகியவை சிங்கப்பூரில் இப்போது செயல்பட்டுவரும் கிரிக்கெட் பயிற்சிப் பள்ளிகள். தோனியின் பயிற்சிப் பள்ளி ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள செயிண்ட் பேட்ரிக்ஸ் பள்ளியில் அமைந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்