தம்பனீஸ் அடுக்குமாடி வீட்டில் தீச்சம்பவம் - 40 பேர் வெளியேற்றம்
தம்பனீஸ் ஸ்ட்ரீட் 83இலுள்ள புளோக் 867Aஇல் தீச்சம்பவம் நடந்துள்ளது.
தம்பனீஸ் ஸ்ட்ரீட் 83இலுள்ள புளோக் 867Aஇல் தீச்சம்பவம் நடந்தது.
இன்று மாலை சுமார் 5.30 மணிக்கு உதவிக்கான அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அடுக்குமாடியின் இரண்டாவது மாடி வீடு ஒன்றில் தீ மூண்டதாகத் தெரியவந்தது.
புளோக்கிலிருந்து சுமார் 40 பேர் வெளியேற்றப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.
அடுக்குமாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடி வீடு ஒன்றிலிருந்து தீயின் கரும்புகை வெளிவந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.