Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Raffles கல்விநிலைய மாணவர் உட்பட மேலும் மூவருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
Raffles கல்விநிலைய மாணவர் உட்பட மேலும் மூவருக்குக் கிருமித்தொற்று

படம்: Gaya Chandramohan

சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து நோய் தொற்றியோர் எண்ணிக்கை 96 ஆனது.

நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 12 வயது Raffles கல்வி நிலைய மாணவரும் ஒருவர் என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இன்று மேலும் நால்வர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வூஹானிலிருந்து வந்த சீன மாதும் அவர்களுள் ஒருவர்.

மொத்தத்தில் இதுவரை 66 பேர் நலமாக வீடு திரும்பியிருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.

30 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்