Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது

சாங்கி விமான நிலையத்தில் விமான இருக்கை உறுதிச்சீட்டை (Boarding Pass) முறைகேடாகப் பயன்படுத்திய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் வெவ்வேறு சம்பவங்களின் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது

படம்: Facebook / Singapore Police Force

சாங்கி விமான நிலையத்தில் விமான இருக்கை உறுதிச்சீட்டை (Boarding Pass) முறைகேடாகப் பயன்படுத்திய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் வெவ்வேறு சம்பவங்களின் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

முதல் சம்பவத்தில் 28 வயது ஆடவரும் 26 வயது பெண்ணும், பொருள்,சேவை வரியைத் திரும்பப் பெற முயற்சி செய்ததாய்ச் சந்தேகம் எழுந்தது. பயணமாற்று இடைவழிப் பகுதியில் (Transit Area) அவர்கள் கைது செய்யப்பட்டனர்.  

மற்றொரு சம்பவத்தில், 49 வயது ஆடவர் பயணச்சீட்டை வாங்கி, பயணமாற்று இடைவழிப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் நண்பரை வழியனுப்பவே அப்படிச் செய்திருக்கிறார் என்று சந்தேகிக்கப்பட்டது.

மூவருக்கும் பயணம் மேற்கொள்வதற்கான எண்ணம் ஏதுமில்லை என்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல், விமான இருக்கை உறுதிச்சீட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான இருக்கை உறுதிச்சீட்டை முறைகேடாகப் பயன்படுத்தி, பயண மாற்று இடைவழிப் பகுதிக்குள் நுழைவது சட்டப்படிக் குற்றம் என்பதைக் காவல்துறை வலியுறுத்தியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்