Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவங்காடி நிலையங்களில் உணவருந்திக் கொண்டிருந்த முழுமையாகத் தடுப்பூசி போடாத 38 பேர் பிடிபட்டனர்

உணவங்காடி நிலையங்களில் உணவருந்திக் கொண்டிருந்த முழுமையாகத் தடுப்பூசி போடாத 38 பேர் பிடிபட்டதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

உணவங்காடி நிலையங்களில் உணவருந்திக் கொண்டிருந்த முழுமையாகத் தடுப்பூசி போடாத 38 பேர் பிடிபட்டதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை, பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டதாக அமைப்பு தனது Facebook பக்கத்தில் குறிப்பிட்டது.

COVID-19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத மேலும் 41 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறைந்தபட்சம் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றாதது, 2 பேருக்கும் அதிகமான குழுக்களில் ஒன்றுகூடியது, முகக்கவசத்தைச் சரியாக அணியாதது முதலியவை விதிமீறல்களில் அடங்கும்.

முழுமையாகத் தடுப்பூசி போடாதோர் உணவை வாங்கிச் செல்லுமாறு அமைப்பு கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்