Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

154,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் - 5 பேர் கைது

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு இன்று (ஜனவரி 11) நடத்திய சோதனையில் 154,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாசிப்புநேரம் -
154,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் - 5 பேர் கைது

படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு இன்று (ஜனவரி 11) நடத்திய சோதனையில் 154,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையில் நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டனர்.

1.83 கிலோகிராம் போதைமிகு அபினும் 243 கிராம் ஐஸ் போதைப்பொருளும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.

குடியுரிமை இல்லாத ஆடவர் ஒருவரும், 58 வயது சிங்கப்பூரரும், 36 வயது மலேசியரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பூன் லே பிளேஸ் அருகில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியுரிமை இல்லாத ஆடவருடன் சம்பந்தப்பட்ட  60 வயது ஆடவரும், பெண்ணும் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் வீட்டிலும் அதிக அளவில் போதைப்பொருள்கள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்