சுவா சூ காங்கில் பேருந்தால் மோதப்பட்ட 6 வயதுச் சிறுவன் மரணம்
சுவா சூ காங் அவென்யூ 5இல் பேருந்தால் மோதப்பட்ட 6 வயதுச் சிறுவன் மாண்டார். அந்தச் சிறுவன் SMRT பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சுவா சூ காங் அவென்யூ 5இல் பேருந்தால் மோதப்பட்ட 6 வயதுச் சிறுவன் மாண்டார். அந்தச் சிறுவன் SMRT பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து குறித்துக் காலை 9 மணியளவில் தகவல் கிடைத்தது. பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை உரிய சாதனங்களைக் கொண்டு மீட்டு தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
கடுமையாகக் காயமடைந்த சிறுவனின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. சம்பவம் குறித்த புலனாய்வில் 57 வயது பேருந்து ஓட்டுநர் காவல்துறையினருக்கு உதவி வருகிறார்.