3 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் - 6 இளையர்கள் கைது
மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுமார் 3 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுமார் 3 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சிங்கப்பூரர்கள்.
18 வயதுச் சந்தேக நபரின் பையிலிருந்து சுமார் 2.9 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவரின் வீட்டைச் சோதனை செய்ததில் சுமார் 45 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது விசாரணை தொடர்கிறது.