Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -

கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை இன்று (ஜூன் 13) அதைப் பற்றித் தெரிவித்தது.

நேற்றிரவு சுமார் ஒன்பதரை மணிக்கு, சுவா சூ காங் அவென்யூ 3 கார் நிறுத்துமிடத்தில் நேர்ந்த கத்திக்குத்துச் சம்பவம் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், 52 வயது ஆடவரைக் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டனர்.

சுயநினைவுடன் இருந்த அந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இரு ஆடவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

60 வயது சந்தேக நபர், காவல்துறையினர் செல்வதற்கு முன்பாக அங்கிருந்து தப்பிவிட்டார்.

ஆனால் தாக்குதல் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவர் கைதுசெய்யப்பட்டார்.

கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது நாளை (ஜூன் 14) குற்றஞ்ச்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்