Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொகுசுக் கப்பல் முனையத்தில் 80 வயது ஆடவரிடம் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையத்தில் 80 வயது ஆடவரிடமிருந்து தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
சொகுசுக் கப்பல் முனையத்தில் 80 வயது ஆடவரிடம் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

படங்கள்: குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்

சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையத்தில் 80 வயது ஆடவரிடமிருந்து தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த ஆடவர் சிங்கப்பூர்ச் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10) சம்பவம் நிகழ்ந்தது.

சோதனைகளின் போது ஆடவரின் இரண்டு பைகளில் வழக்கத்திற்கு மாறான பொருள்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மூன்று பெட்டி சிகரெட்டுகள், 34 பொட்டலங்கள் ஆகியவற்றுடன் 21 தனி சிகரெட்டுகளையும் அவர்கள் கைப்பற்றினர்.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது Facebook பதிவில் அதனைத் தெரிவித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்