கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 809 பேர் மருத்துவமனையில்
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 809 பேர், தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 809 பேர், தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு உயிர்வாயு வழங்கப்படுகிறது.
கவலைக்கிடமான நிலையில் உள்ள 9 பேர், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி போடாமல், கடந்த 28 நாளில், கடுமையாக நோய்வாய்ப்பட்டோர் அல்லது மாண்டோர் விகிதம் சுமார் 6 விழுக்காடாகப் பதிவானது.
மாறாக, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடையே அந்த விகிதம் சுமார் ஒரு விழுக்காடு எனத் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுமுன்தின நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள்தொகையில், 81 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.