Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருளுக்கு எதிரான 6 நாள் சோதனையில் 95 பேர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சிங்கப்பூர் முழுவதும் நடத்திய 6 நாள் சோதனை நடவடிக்கையில் 95 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
போதைப்பொருளுக்கு எதிரான 6 நாள் சோதனையில் 95 பேர் கைது

படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சிங்கப்பூர் முழுவதும் நடத்திய 6 நாள் சோதனை நடவடிக்கையில் 95 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து இன்று வரை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புக்கிட் மேரா, கிளமெண்டி, யூனோஸ், மெக்பர்சன், பொங்கோல், தோபாயோ, துவாஸ், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் சோதனை நடத்தப்பட்டது.

47 கிராம் ஐஸ், 19 கிராம் போதைமிகு அபின், 17 கிராம் கஞ்சா, 8 கிராம் கெட்டமைன், 101 Erimin-5 மாத்திரைகள், 34 எக்ஸ்டஸி மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்