Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

களவாடப்பட்ட வேதியியல் தேர்வுத் தாட்களால் பாதிக்கப்பட்டோரில், 75 மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதவுள்ளனர்

H2 வேதியியல் பாடத்துக்கான 3ஆம் தாளுக்கான விடைத்தாட்கள் திருடுபோயின.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் சென்ற ஆண்டு பொதுக்கல்விச் சான்றிதழ் மேல் நிலைக்கான வேதியியல் தேர்வு விடைத்தாட்கள் பிரிட்டனில் திருடுபோன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களில் முக்கால்வாசிப் பேர் தேர்வை மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.

H2 வேதியியல் பாடத்துக்கான 3ஆம் தாளுக்கான விடைத்தாட்கள் திருடுபோயின.

மொத்த மதிப்பெண்ணில் 35 விழுக்காட்டுக்கான விடைத்தாட்கள் அவை.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரைப்பின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அடுத்த மாதமோ, நவம்பரிலோ அவர்கள் மீண்டும் தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இரு தேர்வுகளின் மதிப்பெண்ணில் சிறந்தது, அவர்களது பொதுக்கல்வி மேல் நிலைச் சான்றிதழில் பதியப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்