புத்திசாலிகள், திறமைசாலிகள், பரிவுமிக்கவர்கள் - 'GCE' A நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற இந்திய மாணவர்கள்
சிங்கப்பூரில் பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள இந்திய மாணவர்களில் பலர் மீளும் தன்மைமிக்கவர்கள், புத்திசாலிகள், திறமைசாலிகள், பரிவுமிக்கவர்கள் - அவர்களில் சிலரின் வெற்றிக் கதைகள்...
சிங்கப்பூரில் பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள இந்திய மாணவர்களில் பலர் மீளும் தன்மைமிக்கவர்கள், புத்திசாலிகள், திறமைசாலிகள், பரிவுமிக்கவர்கள் - அவர்களில் சிலரின் வெற்றிக் கதைகள்...
சஹானா தேவி, யுனோயா தொடக்கக் கல்லூரி
தமிழ்மொழி மீது பற்று கொண்ட சஹானா, தேசிய தமிழ்மொழித் திட்டத்திற்கான உபகாரச் சம்பளம் பெற்றவர்.
தமிழ் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடும் அவர் மற்ற தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்.
'A' நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அவர், பள்ளி இணைப்பாட நடவடிக்கைகளின் மூலம் இயற்கை மீதான பரிவையும் இயற்கையைப் பாதுகாப்பதில் ஆர்வத்தையும் காட்டி வருகிறார்.
அஷ்வின் சுண்டயில், ஆங்கிலோ-சீனத் தொடக்கக் கல்லூரி
தொடக்கக் கல்லூரியில் அஷ்வின் 5 பெரிய நாடகப் படைப்புகளில் ஈடுபட்டார். அவற்றில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வெவ்வேறானவை, மாறுபட்டவை.
மேடையில் மட்டுமல்லாமல், மற்ற பாடங்களிலும் அஷ்வின் சிறந்து விளங்கினார். 2019ஆம் ஆண்டில் பள்ளியின் நன்மதிப்புப் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றது.
சென்ற ஆண்டு, அவர் தம் தொடக்கக் கல்லூரியின் முன்னோட்டத் தேர்வின் சிறந்த மாணவர்களில் ஒருவராக விளங்கினார். அதனால், அவருக்கு CDC-CCC கல்வித் தகுதி விருது வழங்கப்பட்டது.
புவியியல் பாடத்தில் ஆர்வம் கொண்ட ராம் அதில் சிறந்த தேர்ச்சி பெற்றதாலும் ஆராய்ச்சி செய்ய விரும்பியதாலும் தேசியப் பல்கலைக் கழகத்தில் H3 நிலையில் உள்ள புவிசார்-அரசியல் பாடம் பயிலத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'A' நிலைத் தேர்வு நேரத்தில் அவருக்கு உடல் நலமில்லாதபோதும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டார் ராம்.
அவர், அனைத்து இன்னல்களையும் தாண்டி A நிலைத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்று தம் பள்ளியின் சிறந்த மாணவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
நசிமா நாடகப் பாடம் பயின்றவர். பாலிவுட் படங்களின் மீது அதிக ஆர்வம் கொண்ட நசிமா நாடகப் பாடத்திலும் ஈடுபாடு காட்டினார்.
பாடத்தின் மூலம் அவர் தயாரித்த நாடகம் அவருக்குப் பாராட்டைச் சேர்த்தது. அதில் அவர் வெளிக்கொணர்ந்த சில வாழ்க்கைக் குறிப்புகளின் மூலம் ஆழ்ந்த சிந்தனையைப் புலப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
பொதுச் சேவைப் பிரிவில் பணியாற்ற விரும்பும் நசிமா, தமது சக மாணவர்களிடம் பரிவு காட்டுபவர்.