Adapt and Grow திட்டம் மூலம் கடந்தாண்டு 30,000 சிங்கப்பூரர்களுக்குப் புதிய வேலை
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியடையும் அதேவேளையில் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடரவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியடையும் அதேவேளையில் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடரவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
வாழ்நாள் கற்றல் நிலையத்திற்கு வருகை புரிந்த அவர், வேலை தேடும் சிங்கப்பூரர்களுக்கு நடப்பிலுள்ள சில திட்டங்கள் பயனளித்துள்ளன என்றார்.
Adapt and Grow திட்டம் 30,000 சிங்கப்பூரர்கள் சென்ற ஆண்டு புதிய வேலைகளைப் பெறுவதற்கு உதவியிருப்பதாகப் பிரதமர் லீ கூறினார்.
2017ம் ஆண்டில் சுமார் 25,000 பேர் பயனடைந்தனர்.
திரு. லீயுடன் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ வேலை தேடுவோரை நேரில் சந்திக்கச் சென்றிருந்தார்.
உற்பத்தி, பாதுகாப்பு, சில்லறை வர்த்தகம், நிதி ஆகிய நான்கு துறைகளில் தொழில்நுட்ப உருமாற்றத் திட்டத்தை ஊழியரணி அமைப்பு அறிமுகம் செய்யவிருப்பது குறித்து அதிகாரிகள் அவர்களிடம் விளக்கம் அளித்தனர்.