Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூன் கெங் ரோட்டில் விபத்து-பாதசாரி மரணம், டாக்ஸி ஓட்டுநர் கைது

கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி பாதசாரிக்கு மரணம் விளைவித்த குற்றத்தின்பேரில் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பூன் கெங் ரோட்டில் விபத்து-பாதசாரி மரணம், டாக்ஸி ஓட்டுநர் கைது

(படம்: திரு கோ)

கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி பாதசாரிக்கு மரணம் விளைவித்த குற்றத்தின்பேரில் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

விபத்து நேற்றிரவு சுமார் 9.30மணியளவில் நடந்தது.

டௌனர் ரோடு நோக்கிச் செல்லும் பூன் கெங் ரோட்டில் வேகமாக வந்த டாக்ஸி, 53 வயது பாதசாரி மீது மோதியது. ஆடவர் அசைவின்றி காணப்பட்டார். பின் அவர் மாண்டுவிட்டதை, மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

சம்பவம் குறித்து காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்