Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மரினா பே வர்த்தக நிலையத்தின் நடைபாதையில் கார் மோதியது - 4 பேர் காயம்

மரினா பே வர்த்தக நிலையத்தின் நடைபாதையில் கார் மோதியதால் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மரினா பே வர்த்தக நிலையத்தின் நடைபாதையில் கார் மோதியது - 4 பேர் காயம்

படம்: Facebook/Wongu Njie Chingu

மரினா பே வர்த்தக நிலையத்தின் நடைபாதையில் கார் மோதியதால் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் நால்வரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளனர்.

விபத்து தொடர்பில் மாலை 6:10 மணியளவில் குடிமைத் தற்காப்பு படையினருக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான படங்கள் Facebook பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

அதில் Mitsubishi Lancer கார், மரினா பே வர்த்தக நிலையத்தின் மூன்றாம் கட்டடத்தின் நடைபாதைத் தடுப்புகளை உடைத்து உள்ளே வந்துள்ளது.

விபத்து தொடர்பாக விசாரணை தொடர்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்