பிரேடல்-பீஷான் ரோடு சந்திப்பில் நடந்த விபத்து - லாரி ஓட்டுநர் கைது
பிரேடல் ரோட்டுக்கும் பீஷான் ரோட்டுக்கும் இடையிலான சந்திப்பில், பேருந்துடன் மோதிய லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று நடந்தது.
பிரேடல் ரோட்டுக்கும் பீஷான் ரோட்டுக்கும் இடையிலான சந்திப்பில், பேருந்துடன் மோதிய லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நேற்று நடந்தது.
SBS Transit நிறுவனத்திடம் CNA விசாரித்ததில், பேருந்து, பிரேடல் ரோட்டில் நேராக சென்றுகொண்டிருந்தபோது, அதற்குக் குறுக்காக வந்த லாரி அதனுடன் மோதியதாக நிறுவனம் கூறியது.
விபத்தில் ஒரு காரும் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
லாரியில் பயணியாக இருந்த 22 வயது ஆடவரும் பேருந்துப் பயணியான 46 வயதுப் பெண்ணும் டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.