கழக வீட்டு உரிமையாளர்கள் இனி ஓய்வுபெறும் மோப்ப நாய்களைத் தத்தெடுக்கலாம்
கழக வீட்டு உரிமையாளர்கள் இனி ஓய்வுபெறும் மோப்ப நாய்களைத் தத்தெடுக்கலாம்
பணியில் இருந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுரிமையாளர்கள் இனி தத்தெடுக்கலாம்.
Project ADORE எனும் ஓராண்டுத் திட்டத்தின்கீழ், நாளை மறுநாள்முதல் அதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தத் திட்டம், கடந்த ஜூன் மாதம் விரிவுபடுத்தப்பட்டது.
சேவையில் இருந்து ஓய்வுபெற்ற 14 மோப்ப நாய்களைத் தத்து கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவற்றைப் பராமரித்து வந்தவர்களுடன் அவை தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது.
நாய்களைத் தத்தெடுப்போர் எண்ணிக்கையை அதிகரிக்க, இப்போது அந்தத் திட்டம், ஏற்கனவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட, கழக வீட்டுரிமையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஓராண்டு கால முன்னோட்டமாக அது அறிமுகம் காண்கிறது.