தேவைக்கு ஏற்பச் செயல்படும் பொதுப் பேருந்துச் சேவைகள் - பயன்படுத்துவது எப்படி?
நிலப் போக்குவரத்து ஆணையம், தேவைக்கு ஏற்பச் செயல்படும் பொதுப் பேருந்துச் சேவைகளை நேற்று (டிசம்பர் 17) தொடங்கியது.
அந்தச் சேவைகள் ஜூ கூனிலும் மரினா டௌன்டவுனிலும் அறிமுகம் கண்டுள்ளன.
இவ்வேளையில் தேவைக்கேற்பச் செயல்படும் பேருந்துகளின் பயன்பாட்டினைப் பற்றி சிலருக்குச் சந்தேகம் இருக்கலாம்.
தேவைக்கேற்பச் செயல்படும் பேருந்துகளை எப்படிப் பயன்படுத்துவது?
1. 'BusNow' அல்லது 'BusGo' எனும் செயலிகளைக் கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. நீங்கள் காத்திருக்கும் இடத்தையும் செல்ல வேண்டிய இடத்தையும் செயலியில் குறிப்பிட வேண்டும்.
3. கொடுக்கப்படும் தெரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
4. பேருந்தில் ஏறுவதற்கான மின்னியல் அட்டையைச் செயலி காட்டும்.
5. பேருந்தில் ஏறும்போது அந்த மின்னியல் அட்டையை ஓட்டுநரிடம் காட்டுங்கள்.
6. வழக்கம் போல EZ Link அட்டை வழி பயணத்திற்குக் கட்டணம் செலுத்துங்கள்.
7. பயணம் தொடங்கியது.
8. நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், செயலி உங்களுக்கு அதை ஞாபகப்படுத்தும்.
9. பயணம் நிறைவடைந்தது.
இன்னும் குழப்பமா?
உங்கள் குழப்பத்தைத் தெளிவுபடுத்த நிலப் போக்குவரத்து ஆணையம் இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது: