அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு இன்று வெளியிட்ட அறிவிப்புகள் - ஒரு நிமிடத்தில்
அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு இன்று வெளியிட்ட அறிவிப்புகள் - ஒரு நிமிடத்தில்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் சமூகத்தில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கருத்தில்கொண்டு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவுள்ளன.
அதன் விவரங்கள் இதோ...
- சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 8லிருந்து 5க்குக் குறைக்கப்படும்.
- ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 முறை மட்டுமே வீடுகளில் அல்லது வெளியிடங்களில் கூடலாம்.
- வேலையிடங்களுக்குச் சென்று பணிபுரிய அனுமதிக்கப்படும் ஊழியர்களின் விகிதத்தை, நிறுவனங்கள், தற்போதுள்ள 75 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காட்டுக்கு குறைக்கவேண்டும்.
- சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடையே, உருமாறிய 7 வகைக் கொரோனா கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கிருமித்தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் அரசாங்கத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 21 நாள் தங்க வேண்டும்.
- இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து, கிருமிப்பரவல் அபாயம் அதிகமுள்ள இடங்களில் TraceTogether மட்டுமே பயன்படுத்த முடியும்.
- முன்னெச்சரிக்கையாக அடுத்த சில வாரங்களுக்கு உள்ளரங்கு உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படும்.
- பொதுமக்கள் அதிகமாகப் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் தற்காலிக ரத்து.
- இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50இலிருந்து 30-க்குக் குறைப்பு.
- வழிபாட்டுத் தலங்களில் பாடல் வழிபாடு இல்லை. அதிகபட்சம் 250 பேருக்கு அனுமதி.