வியட்நாம் பேருந்து விபத்து: அனைத்து SMU மாணவர்களும் சிங்கப்பூர் திரும்பியுள்ளனர்
வியட்நாமில் நேர்ந்த பேருந்து விபத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களும் சிங்கப்பூர் திரும்பியுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
வியட்நாமில் நேர்ந்த பேருந்து விபத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களும் சிங்கப்பூர் திரும்பியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட விபத்தில் 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
வெளிநாட்டு சமூகச் சேவைத் திட்டத்திற்காகப் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்து ஹியூ (Hue) நகரத்திற்குச் சென்ற 30 மாணவர்களில் அவர்கள் அடங்குவர்.
எஞ்சிய 10 மாணவர்கள் மற்றொரு பேருந்தில் பயணம் செய்தனர். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
காயமடைந்த நால்வர் மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டனர்.
கால் எலும்பு முறிவு, கழுத்துக் காயம் ஆகியவற்றுக்காக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.