Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீண்டும் 'அமர்க்கள தீபாவளி' - 2 மணிநேர ஆடல், பாடல் நிகழ்ச்சி

மீண்டும் 'அமர்க்கள தீபாவளி' - 2 மணிநேர ஆடல், பாடல் நிகழ்ச்சி

வாசிப்புநேரம் -

தீபாவளி குதுகலத்தை மேலும் அதிகரிக்க 'அமர்க்கள தீபாவளி' மீண்டும் இடம்பெறுகிறது.

நவம்பர் 3 ஆம் தேதியன்று சுமார் 2 மணிநேர ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு மீடியாகார்ப் ஏற்பாடு செய்துள்ளது.

உள்ளூர் நட்சத்திரங்களும் கலைஞர்களும் நிகழ்ச்சிக்கு அழகு சேர்க்கின்றனர்.

படைப்பாளர்கள் உதய சௌந்தரி, சரவணன் அய்யாவு , ஜெனேஷ் ஆகியோர் நகைச்சுவை இழையோட நிகழ்ச்சியைச் சிறப்பாகப் படைக்கவுள்ளனர்.

லிட்டில் இந்தியா வட்டாரத்திலிருந்து கார்த்திகேயன் சோமசுந்தரம், நெருப்பு குணா, சஜினி நாயுடு ஆகியோர் நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளனர்.

வசந்தம் கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் உண்டு.

உள்ளூர்ப் பாடகர்கள் பிரசன்னா, பவித்ரா, விஷ்ணு பாலாஜி போன்றோர் செவிக்கு விருந்து படைப்பர்.

இரவு 10 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சி விடியவிடிய தீபாவளி உற்சாகத்தைக் கூட்டும் நிகழ்ச்சியாக மலரும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை இரவு 10 மணியிலிருந்து வசந்தம் ஒளிவழியிலும் Mewatch தளத்திலும் கண்டு ரசிக்கலாம்.

நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து நவம்பர் 7ஆம் தேதி வரை வசந்தம் ஒளிவழியில் பிரபல திரைப்படங்களும் புதிய திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்