அங் மோ கியோ நகைக் கடைக் கொள்ளை - மூவர் கைது
அங் மோ கியோவில் உள்ள Hock Cheong Jade and Jewellery நகைக் கடையில் கொள்ளையடித்த சந்தேகத்தின்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
அங் மோ கியோவில் உள்ள Hock Cheong Jade and Jewellery நகைக் கடையில் கொள்ளையடித்த சந்தேகத்தின்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நாளுக்கு முன்னர் (ஆகஸ்ட் 14) அந்தச் சம்பவம் நடந்தது.
27 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்கள் பல்வேறு காவல்துறைப் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு 36 மணிநேரத்திற்குள் கைதுசெய்யப்பட்டனர்.
கழுத்தணி, வளையல், பதக்கம் ஆகிய நகைகள் களவாடப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 100,000 வெள்ளி.
அவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை என்றும் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.