திரு. அன்வார் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது
மலேசியாவின் அடுத்த பிரதமராகலாம் என எதிர்பார்க்கப்படும் திரு. அன்வார் இப்ராஹிம், இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் அடுத்த பிரதமராகலாம் என எதிர்பார்க்கப்படும் திரு. அன்வார் இப்ராஹிம், இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரை விடுவிப்பது பற்றி கலந்துபேச, பொது மன்னிப்பைப் பரிசீலனை செய்யும் குழு, மலேசிய மாமன்னரை இன்று காலை 11 மணிக்குச் சந்திக்கவிருக்கிறது.
PKR கட்சியின் தலைவரான திரு. அன்வார் மீது, தகாத உறவு தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என அவரும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.
திரு. அன்வாருக்குப் பொது மன்னிப்பு வழங்கப் போவதாக மன்னர் ஏற்கவவே கூறியிருந்தார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிவரும் மருத்துவமனையில் இருந்து, திரு. அன்வார் நேரடியாக இன்று நண்பகல் 12 மணியளவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது மன்னிப்பு வழங்கப்படுவதன் மூலம், திரு. அன்வார் அரசியலுக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமாகும்.