Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின் வணிக மோசடி - பதின்ம வயதினர் இருவர் கைது

மின் வணிக மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில், பதின்ம வயதினர் இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
மின் வணிக மோசடி - பதின்ம வயதினர் இருவர் கைது

படம்: Jeremy Long

மின் வணிக மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில், பதின்ம வயதினர் இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

Carousell மின் வணிகத் தளத்தில் கைத்தொலைபேசி ஒன்றை வாங்க முயன்ற நபர், தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகச் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

வங்கிப் பரிவர்த்தனை மூலம் சுமார் 700 வெள்ளியைச் செலுத்திய பின், விற்பனையாளரைத் தொடர்புகொள்ள முடியாமற்போனதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஏமாற்றப்பட்டவருக்குக் கைத்தொலைபேசி கிடைக்கவில்லை.

விசாரணைக்குப் பின், 19 வயது சந்தேக ஆடவரையும் அவருடன் சேர்ந்து குற்றம் புரிந்ததாக நம்பப்படும் 18 வயது ஆடவரையும் ஜூரோங் காவல்துறை பிரிவு அடையாளம் கண்டு, நேற்று முன்தினம் கைது செய்தது.

காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரையிலான சிறை, அபராதம் இரண்டுமே விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்