AYE விரைவுச்சாலையில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்- இருவர் கைது
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 59 வயது மோட்டார்சைக்கிளோட்டி இன்று காலை மாண்டார்.
சிங்கப்பூர்: ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 59 வயது மோட்டார்சைக்கிளோட்டி இன்று காலை மாண்டார்.
இரு மோட்டார்சைக்கிள்களும் ஒரு பேருந்தும் சம்பந்தப்பட்ட விபத்து காலை 7 மணியளவில் நேர்ந்தது. ஜூரோங் பியர் ரோட்டிற்கு இட்டுச் செல்லும் வழிக்கு முன்னால் சம்பவம் ஏற்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவ இடத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.
விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கவனக்குறைவால் மரணம் விளைவித்ததற்காக 52 வயது பேருந்து ஒட்டுநர் கைதுசெய்யப்பட்டார். 20 வயது மோட்டர்சைக்கிளோட்டி மருத்துவமனையில் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
விபத்தைத் தொடர்ந்து காலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனமோட்டிகள் சாலையின் முதல் இரு தடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.