Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் காயமடைந்த பங்களாதேஷ் ஊழியர் விடுதிக்குத் திரும்பியுள்ளார்

நொவீனா வட்டாரத்தில், பாரந்தூக்கி முறிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த பங்களாதேஷ் ஊழியர் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு தங்கும் விடுதிக்குத் திரும்பியுள்ளார்

வாசிப்புநேரம் -
பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் காயமடைந்த பங்களாதேஷ் ஊழியர் விடுதிக்குத் திரும்பியுள்ளார்

(படம்: Try Sutrisno Foo/ CNA)

நொவீனா வட்டாரத்தில், பாரந்தூக்கி முறிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த பங்களாதேஷ் ஊழியர் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு தங்கும் விடுதிக்குத் திரும்பியுள்ளார்.

அவர் தங்குவதற்கான வசதிகளைக் கட்டுமான நிறுவனம் செய்துகொடுத்துள்ளது.

அவருக்கு உதவ மற்றோர் ஊழியர் உடனிருக்கவும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

விபத்தில் மாண்ட 28 வயது வேல்முருகன் முத்தையனின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரின் இறுதிச்சடங்கு, குடும்பத்தாருக்கு வழங்கப்படவுள்ள இழப்பீடு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைக் கட்டுமான நிறுவனம் செய்துவருகிறது.

நொவீனா வட்டாரத்தின் ஜாலான் டான் டொக் செங் பகுதியில் வேல்முருகன் முத்தையன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை, பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்