Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

NTUC FairPrice பேரங்காடியில் வாழைப்பழத்தைக் கொறித்த வௌவால் - பழங்கள் சோதிக்கப்பட்டு வீசப்பட்டன

ஜூரோங் ஈஸ்ட் NTUC FairPrice பேரங்காடியில் வாழைப்பழத்தை வௌவால் கொறிக்கும் காணொளி பரவியதைத் தொடர்ந்து பழங்கள் சோதிக்கப்பட்டுத் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
NTUC FairPrice பேரங்காடியில் வாழைப்பழத்தைக் கொறித்த வௌவால் - பழங்கள் சோதிக்கப்பட்டு வீசப்பட்டன

(படம்: Facebook/Jas Tan)

ஜூரோங் ஈஸ்ட் NTUC FairPrice பேரங்காடியில் வாழைப்பழத்தை வௌவால் கொறிக்கும் காணொளி பரவியதைத் தொடர்ந்து பழங்கள் சோதிக்கப்பட்டுத் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரங்காடிக்கு வெளியே தொங்க விடப்பட்டிருக்கும் ஒரு சீப்பு வாழைப்பழத்தில் ஒன்றை வௌவால் கொறித்துக் கொண்டிருப்பது காணொளியில் தெரிகிறது.

மற்ற காய்கறிகள், பழங்களுடன் வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கவில்லை.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்டிரீட் 31, புளோக் 345இல் உள்ள 24-மணிநேரப் பேரங்காடியில் எடுக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவுவதை அறிவதாய் NTUC FairPrice Facebook பக்கத்தில் தெரிவித்தது.

சம்பவத்தைத் தொடர்ந்து, வெளியில் வைக்கப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகள் அனைத்தும் பேரங்காடிக்குள் இடமாற்றப்பட்டதாய் நிறுவனம் தெரிவித்தது.

வட்டாரத்தில் எவ்வாறு வௌவால்கள் வந்தன என்பதை அறிய சம்பந்தப்பட்ட, அரசாங்க அமைப்புடன் தொடர்பில் இருப்பதாய் NTUC FairPrice தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்