Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கரையோரப் பூங்காவின் மலர்க் கூடத்திற்கு, முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கு மாதம் ஒருமுறை இலவச அனுமதி

கரையோரப் பூங்காவின் மலர்க் கூடத்திற்கு, முன்னோடித் தலைமுறையையும், மெர்டேக்கா தலைமுறையையும் சேர்ந்தவர்கள் இனிமேல் மாதம் ஒரு முறை இலவசமாகச் சென்று வரலாம்.  

வாசிப்புநேரம் -
கரையோரப் பூங்காவின் மலர்க் கூடத்திற்கு, முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கு மாதம் ஒருமுறை இலவச அனுமதி

படம்: Alif Amsyar

கரையோரப் பூங்காவின் மலர்க் கூடத்திற்கு, முன்னோடித் தலைமுறையையும், மெர்டேக்கா தலைமுறையையும் சேர்ந்தவர்கள் இனிமேல் மாதம் ஒரு முறை இலவசமாகச் சென்று வரலாம்.

இந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி ஓராண்டுக்கு, மாதத்தோறும், இரண்டாம் செவ்வாய்க்கிழமை அவர்களுக்கு அனுமதி இலவசம்.

கரையோரப் பூங்காவின் புது அம்சமான, Bayfront Plaza-வின் திறப்பு விழாவில் அதுபற்றி அறிவிக்கப்பட்டது.

பே ஃபிரண்ட் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்திருக்கும் Bayfront Plaza-கட்டடத்தில், 2 ஆயிரம் மீட்டர் பரப்பளவிலான பொதுக் கூடம் ஒன்று உள்ளது.

சமூகக் குழுக்கள், அங்கே இலவசமாக நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.

கரையோரப் பூந்தோட்டத்தில், நுழைவுச் சீட்டு தேவைப்படாத பொது இடங்களை அதிகரிக்கும் முயற்சியின் ஒருகூறாகப் புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தோடு கூடிய Floral Fantasy என்றழைக்கப்படும் மலர்க் கண்காட்சியும் அங்கே உண்டு. அதில் சுமார் 3,000 பூக்களும், 150க்கும் அதிகமான மலர் வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்