Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சைக்கிள்கள் தொடர்பான பொது விதிமுறைகள்

குடியரசில், மக்கள் செயல் கட்சியால் நடத்தப்படும் 15 நகர மன்றங்களும், சைக்கிள்களைப் பயன்படுத்துவதற்கான பொதுவான விதிமுறைகளை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

குடியரசில், மக்கள் செயல் கட்சியால் நடத்தப்படும் 15 நகர மன்றங்களும், சைக்கிள்களைப் பயன்படுத்துவதற்கான பொதுவான விதிமுறைகளை உருவாக்கி வருவதாக, மக்கள் செயல் கட்சி நகர மன்றங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் தியோ ஹோ பின் கூறினார்.

அதன்படி, பொதுமக்கள் சைக்கிள்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், நிறுத்தி வைப்பதற்கும், ஓட்டுவதற்கும் பொதுவான விதிமுறைகள் வகுக்கப்படும்.

அவ்வாறு உருவாக்கப்படும் புதிய கட்டமைப்பின் கீழ், மிதிவண்டிகளை விட்டுச் செல்வதற்கான, குறிப்பிட்ட நிறுத்தும் இடங்கள் வரையறுக்கப்படும்.

மேலும், வீடமைப்புப் பேட்டைகளில், மிதிவண்டி ஓட்டுவதற்கான பாதைகள் முறையாக அடையாளம் காணப்பட்டு, பொதுமக்களிடம் தெரிவிக்கப்படும். மிதிவண்டிகளை ஆபத்தாக ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான முயற்சியில் நிலப் போக்குவரத்து ஆணையமும் ஈடுபட்டிருப்பதாக டாக்டர் தியோ கூறினார்.

அண்மைய மாதங்களில், மிதிவண்டிகளைப் பகிர்ந்துகொள்ளும் திட்டம் பிரபலமடைந்து வருவதை அடுத்து, அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாய் அவர் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்