Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

படகோட்டத்தில் ஈடுபட்டுக் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் சடலம் கண்டுபிடிப்பு

மலேசியாவில் படகோட்டத்தில் ஈடுபட்டுக் காணாமற்போன சிங்கப்பூர் மாது புவா கியோக்கின் சடலம் திரங்கானு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
படகோட்டத்தில் ஈடுபட்டுக் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் சடலம் கண்டுபிடிப்பு

படம்: Bernama

மலேசியாவில் படகோட்டத்தில் ஈடுபட்டுக் காணாமற்போன சிங்கப்பூர் மாது புவா கியோக்கின் சடலம் திரங்கானு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது படகோட்டத்தில் ஈடுபட்டபோது காணாமற்போன இரு சிங்கப்பூரர்களில் ஒருவருடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Kemaman கடற்பகுதியில், இன்று நண்பகல்வாக்கில், உள்ளூர் மீனவர் சடலத்தைக் கண்டுபிடித்ததாக, மலேசியக் கடல்துறை அமலாக்கப் பிரிவு தெரிவித்தது.

திருவாட்டி புவாவின் குடும்பத்தினருக்குத் தகவல் தரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அவரது சடலம் Kemaman காவல்நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை எண்டாவ் தீவுகளுக்கருகே படகோட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேரில், 64 வயது திருவாட்டி புவா கியோ, 52 வயது திரு. டான் இங் சூன் இருவரும் காணாமற்போயினர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்