மலேசியா: விளையாடும் இடத்தில் கருகிய சிறுவனின் சடலம் கண்டுபிடிப்பு
ஜார்ஜ்டவுன் பகுதியில் விளையாடும் இடமொன்றில் கொள்கலனில் சிக்கிய 8 வயதுச் சிறுவன் கருகிய நிலையில் இன்று (ஜனவரி 13)கண்டெடுக்கப்பட்டான்.
பினாங்கு: ஜார்ஜ்டவுன் பகுதியில் விளையாடும் இடமொன்றில் கொள்கலனில் சிக்கிய 8 வயதுச் சிறுவன் கருகிய நிலையில் இன்று (ஜனவரி 13)கண்டெடுக்கப்பட்டான்.
அறைகலன்களை வைக்கும் அந்தக் கொள்கலனைச் சிறுவர்கள் விளையாட்டுத் தளமாகப் பயன்படுத்தியதாகத் தீயணைப்பாளர்கள் கூறினர்.
தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தபின் சிறுவனின் சடலத்தைக் கண்டனர்.
சிறுவன் கொள்கலனில் தீமூட்டும் கருவியைக் கொண்டு(lighter)விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அங்கிருந்த அறைகலனிலிருந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணைகள் கூறுகின்றன.
சிறுவனுடன் இருந்த நண்பன் காயமின்றித் தப்பியதாகத் தெரிகிறது.
தீச்சம்பவம் சந்தேகத்துக்குரிய ஒன்றல்ல என்று தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.