Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக் தொகுதியில் முரளி பிள்ளையை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சூன் ஜுவான் போட்டி

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் முரளி பிள்ளையை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சூன் ஜுவான் போட்டியிடுகிறார்.

வாசிப்புநேரம் -
புக்கிட் பாத்தோக் தொகுதியில் முரளி பிள்ளையை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சூன் ஜுவான் போட்டி

(படம்: Gaya Chandramohan)

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் முரளி பிள்ளையை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சூன் ஜுவான் போட்டியிடுகிறார்.

இன்று காலை அவர்கள் இருவரும் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் புக்கிட் பாத்தோக் தொகுதியில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினர்.

இதற்கு முன்னர் திரு முரளி பிள்ளையும் சீ சூன் ஜுவானும் 2016ஆம் ஆண்டு புக்கிட் பாத்தோக்கில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

அதில் திரு முரளி பிள்ளை 61.2 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

புக்கிட் பாத்தோக் வட்டாரவாசிகள் கட்டாயம் ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்தெடுப்பார்கள்; இந்தக் கடினமான சூழலில் இருந்து நாம் வெளிவருவோம் என்றார் முரளி பிள்ளை.

இனிவரும் பிரசார நாள்களில் மக்கள் செயல் கட்சி இந்தத் தொகுதியில் உள்ள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றிப் பேசவிருப்பதாகத் திரு சீ சூன் ஜுவான் கூறினார்.

புக்கிட் பாத்தோக் தொகுதியில் இம்முறை 29,950 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.





விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்