Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜாலான் புக்கிட் மேரா : வீட்டில் தீ மூண்டதில் இருவர் காயம்

ஜாலான் புக்கிட் மேரா (Jalan Bukit Merah) வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ மூண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஜாலான் புக்கிட் மேரா (Jalan Bukit Merah) வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ மூண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அது குறித்து சிங்கப்பூர்க் குடியுரிமை தற்காப்புப் படை தனது Facebook பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

புளோக் 105 ஏழாம் மாடியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இன்று காலை 7 மணி அளவில் தகவல் பெற்றதாகப் படை கூறியது.

விரைந்து சென்ற அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

முன்னெச்சரிக்கையாக, அக்கம்பக்கமிருந்த குடியிருப்பாளர்கள் 20 பேர் வெளியேற்றப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

வீட்டின் கூடத்தில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் மூலம் தீப்பற்றியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்