ஜனவரி 13ஆம் தேதி முதல் முன்னதாகவே மூடப்படும் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் கட்டமைப்பு
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் கட்டமைப்பு அடுத்த மாதம் 13ஆம் தேதியிலிருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு மூடப்படும்.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் கட்டமைப்பு அடுத்த மாதம் 13ஆம் தேதியிலிருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு மூடப்படும்.
SMRT ரயில் நிறுவனமும், நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து புதிய சேவை நேரம் குறித்த கூட்டு அறிக்கையை இன்று வெளியிட்டன.
மேம்பாட்டுப் பணிகள் காரணமாகப் புதிய சேவை நேரம் நடப்புக்கு வருகிறது.
பேருந்துச் சேவை எண்கள் 920, 922, 973, 974 ஆகியவற்றின் சேவை நேரம் நீடிக்கப்படும்.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் C, அதன் சேவைகளை அடுத்த மாதம் 13ஆம் தேதியன்று நிறுத்திக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக அந்தச் சேவைப் பாதை, புதிதாக அறிமுகம் காணவிருக்கும் மற்றொரு சேவைக்கான சோதனைத் தளமாகப் பயன்படுத்தப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.